வானவில்லுக்கு தோதான
காலநிலையுள்ள நாளொன்றில்
மனிதனின் வற்றாத மாசு தானத்தால்
புனிதமற்றுப்போன புனல்நிலைக்குள்
புழுக்கத்தாலோ இல்லை
நடுக்கத்தாலோ
இருப்புக் கொள்ளாமல்
தரைக்கும் தண்ணீருக்குமாய்
தத்தளிக்கிறது முதலையொன்று
கரையில் கண்களை மூடியபடி
திளைத்திருக்கிறது காதலொன்று.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக