வெங்காய சுத்தி

அவசர அவசரமாக 
தோல் உரிக்கப்பட்டு
பலிக்கு முன்பான
திருக்குளியலுக்காக
குளத்தில் குதித்த
சமண உணவு எதிரிகளை
தன் இரண்டு கைகளின்
பிஞ்சு விரல்களாலும்
சுற்றி சுற்றி ஓட விட்டு
சிரித்து களித்தபடி
"வெங்காய சுத்தி,வெங்காய சுத்தி"
என்கின்றது மழலையின் மொழி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக