கடப்பாட்டின் மெய் உருவம்

முகிலின் மொத்தத்தையும்
துகிலுரித்து கீழே இழுத்து
திகிலடையச் செய்கிறது காற்று !

வனமண் வேர்ப்பிடிப்பை இழந்ததால்
சினம் கொண்டு சுட்டெரிக்கிறது 
கனம் பொருந்திய சூரியன் !

துருவப்பெண்களின் பிரசவக் கண்ணீரில்
பருவக்குழந்தை குறைக்கருவாய் கரைந்து
குருதியாய் உமிழ்கின்றது கடற்கரைகளில் !

பஞ்சமும் பலியுமென பல நிகழ்ந்தாலும்
கிஞ்சித்தும் கவலையேதும் கொண்டுவிடாமல்
கஞ்சன் உதறிய கைப்பருக்கை போல,

வன்மையான கண்டனங்களை தெளித்துவிட்டு
தன்மைய அரசியலில் திளைத்து நகரும்
கோன்முறை தவறிய கோமாளித்தலைமைகள் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக