பொய்யொன்று
இடையறாது, உரத்து
பரப்புரை செய்யப்பட்டு
நம்பகத்தன்மை மீதான
சந்தேகங்களுக்கு
எதிர்கேள்வி கேட்கப்பட்டு
உண்மை மீது
ஆதார விதண்டாவாதம்
எழுப்பப்பட்டு
ஆங்காங்கே விஞ்ஞான
சாயம் பூசப்பட்டு
நிறுவப்பட்டுவிடும் !!
நாளடைவில்
கொள்கையாக
கோட்பாடாகக் கூட மாறிவிடும் !!
காலப்போக்கில்
கூட்டமும் கூட்டிவிடும் !
நிர்பந்தங்கள்
நிரூபணங்கள்
நிறுவல்கள்
தேவைப்படாத
நிதர்சனமான உண்மை,
வசை மொழிக்கோ
வஞ்சப்புகழ்ச்சிக்கோ
வன்ம எள்ளலுக்கோ
நிலைகுலையாமல்
நின்ற இடத்தில்
நிர்ச்சலனமாய்
நிரந்தரமாய்
நிற்கும் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக